Monday 25 June 2012

இறைவா!!

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியே!
நீதியை நிலைநாட்டும் நிகரில்லா ஞானமே!
தோன்றி வளர்ந்த பூமியின் காரணியே
தொன்மையின் தொலைவு முதல் புதிதாய் புலப்படும் பூரணமே
திடப்பொருள் முதல் திட்டங்கள் வரையும்
சக்திகள் முதல் சங்கீதம் வரையும்
ஐம்புலன்கள் முதல் புலமைகள் வரையும்
படைத்த பரப்ரம்மமே போற்றி!
கருணைக்கடலே! உம் படைப்பிற்குக் காரணமுண்டு
அடியேன் வாழ்விற்கு உமக்குப்பட்ட கடனுமுண்டு
அ நன்றிக்கடனை நான் தீர்க்காவிட்டாலும்
எமக்கு தீர்கமான மார்கத்தைகாட்டி
உம் பாதம் அடைய செய்யக்கேட்கிறேன்....

No comments:

Post a Comment